Sunday, June 1, 2008

பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்



இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள் . தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.

அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?

வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள் .

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.

உம்முடைய ரப்பு – அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள் ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கியுள் ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) 'சீ ' என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம் . சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள் ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் (இறைத்து}தர் அவர்களே) அல்லாஹ{தஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி)

நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப் பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹ{தஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக் கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுது} ரம ; சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக் கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந் தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது....

அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி) நு}ற்கள் : புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அப10ஹ{ரைரா (ரலி) நு}ல் : முஸ்லிம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக

Wednesday, April 16, 2008

மய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள் .இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமேஅதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்; இன் ன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மைஇ ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது?ப்இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் .எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்

1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)

2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.

3. மை மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும்

நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரிஇமுஸ்லிம்)

4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும்வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம்காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)

5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)

ஜனாஸாவை குளிப்பாட்டுதல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.
: ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.

: கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

: அபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
: ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.
: ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில்தடவவேண்டும்
:காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக)நிற்கவேண்டாம்(அல்குர்ஆண்.9 9ஃ84) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை

: மைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களையவேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்திஉட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் .
: மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும்.பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள் )இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும்உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)

: மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண் ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாகஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்துபற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.
: மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்கவேண்டும். இன்னும னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகிகொண்டிருந்தால்தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.
கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டுமறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை.இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும்.
அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.

: மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது

: பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்

: இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

: போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)
: தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.
: தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.

: மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது,இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)
கஃபனிடுதல்
கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.
: கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்
நபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.
: முகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.
: வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.
: பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்ளை
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .
ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை. முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்;
(அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.
மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் )என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்
நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)
: ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)
ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ;ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)
ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.

ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது
: மூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் !
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.
: பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்க கப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான்மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வா வார்கள் இதற்கு ( ர்(ஷக்கு) என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது. இது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் " ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு ! இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.
; மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி )என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்)மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)
(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன் ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும்அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்த ததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)
கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)
ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
: ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது(ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)
பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்''கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் ""(திர்மிதி, அபூதாவூத்,(நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற ப லகீனமானவர் இழப்புகளை தாங் கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக்கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக மறுமையைப்பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்களநிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹ ராமாக்கப்பட்டிருக்கலாம். (இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்)அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்
ஆறுதல் கூறுதல்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

: ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக ஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
: இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம்செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதைஇஸ்லாம் கண்டிக்கின்றது. இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் '' இத்தா "" என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.
: இன்னும் இதுபோன்ற பித்அத் துகளில் ஒன்றுதான் ஜனாஸாவைத் து}க்குவதற்க்கு பயன்படுத்தும்(சந்து}க்)ஜனாஸாப் பெட்டியின் மீது பச்சை சைத் துணி விரிப்பது, து}க்கித் செல்கிறபோது ஷஹாதா கலிமாவை சப்தமிட்டுக் கொண்டு செல்வது, ஜனாஸா தொழுகைஹமுடிந்தவுடன் இமாம் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுவது அடக்கி முடிந்த பின்னர் கப்ரின்தலைமாட்டில் இருந்து கொண்டு தல்கீன் என்ற பெயரில் பலருக்கும் புரியாத மட்டு மின்றி அதைஓதுபவர்களில் கூட பலருக்கு அது என்ன என்று தெரியாத சில அரபி வார்த்தைகள் கூறுவது போன்ற ஏராளமான பித் அத்கள் நடைபெறுகின்றன. இறந்தவர் வீட்டில் நட நடக்கும் அனாச்க்சாரங்களை ஒரு புத்தகமாகூட வெளியிடலாம் டலாம்: எனவே ஒவ் வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதுஅவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்துதெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.
தொகுத்தவர் : ஆ.யு. லியாக்கத் அலி (மிஸ்பாஹ)
(Y. B. A. KANOO. DAMMAM)

இதில் இருக்கும் தவறுகளை இந்த முகவரியில் தெரிவிக்கவும்(sfirthouse@yahoo.co.in). தவறுகள் இல்லாத பட்சத்தில் உங்களால் முடிந்த வரை இந்த செய்தியை இந்த சமுதாயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் எல்லோரும் செய்ய வேண்டியது ஆகும்.
அன்புடன்

S.பிர்தௌஸ்

Sunday, March 9, 2008

அழிவின் விளிம்பில் (செ.முத்துக்குமாரசாமி)

புவி வெப்பமடைவதால் பல விளைவுகள் உருவாகின்றன. திடீர் புயல், திடீர் மழை, பெருவெள்ளம் மற்றும் குறிப்பாக வெப்பநிலை உயர்வு மற்றும் பனி உருகுதல் போன்றவை வழக்கத்தைவிட அதிகரித்து வருகின்றன.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள 300 பனி ஆறுகள் 1993இல் உருகியதைவிட 2003இல் 12 சதம் அதிகமாக உருகியுள்ளது.

இதனால், கடல்களில் நீர்மட்டம் கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயருமானால் மாலத்தீவு, லட்சத்தீவு, அந்தமான் போன்றவை முற்றிலும் அழிவதோடு மட்டுமல்லாமல் நமது கடலோரப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உள்ளது.

கண்முன்னே அவல சாட்சியாய் நியூ கினியாவிலுள்ள 6 சிறு தீவுகளில் வாழும் 980 நபர்கள் வேறு இடத்திற்கு பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலோடு கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வந்த போராட்டம் தோல்வியுற்றது. கடலின் உயரம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு அங்குலத்துக்கும் சற்று கூடுதலாக அதிகரித்துவருகிறது. இதனால், இவர்கள் வாழும் தீவுகள் கடல் மட்டத்தை நெருங்கி வருகின்றன.

2005 நவம்பர் 24ஆம் தேதி இத்தீவுகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களை மீட்டெடுக்க பாப்புவா நியூகினியா அரசிடம் நிதி இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தற்போது குடும்பம் குடும்பமாக இங்குள்ள மக்கள் 99 கி.மீ. தூரத்தில் உள்ள ‘பொகைன்வில்லே’ தீவுக்கு மாற்றப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளில் ஆறு தீவுகளும் ஆளற்ற தீவுகளாக மாறிவிடும். 2015க்குள் இவை கடலில் மூழ்கிவிடும்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல தீவுகள் கடலுக்கு இரையாகி வருகின்றன. பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாடி, மார்ஷல்ஸ் மற்றும் பல தீவுகளை அடியில் கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகளின் மூலமாகத்தான் பார்க்க வேண்டும். கொலம்பியாவிற்கு அருகே உள்ள ‘சியார்ரா நெவேடா’வில் பனிமலைகள் வறண்டு போய் உள்ளது. தெற்குப் பசிபிக் கடலில் பஜீக்கு வடக்கே உள்ள துவாலு என்ற சின்னஞ்சிறு நாட்டின் பல்வேறு பகுதிகளை கடல் விழுங்கிவிட்டது.

விவசாய நிலம் அனைத்தும் பாறைகளால் மூடப்பட்டுவிட்டது. இதுபோலவே வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ்மலை, அமெரிக்காவின் வடகோடி அலாஸ்கா நகரமான பாரோ, கிரீன்லாந்தில் உள்ள மிகப்பெரும் பனி அடுக்குகள் ஆகியவை மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

இந்தியாவில் கங்கை உருவாகும் பகுதியான கௌமுக்ல் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது. சமீபகாலங்களில் ஹிமாலயத்தின் பலபகுதிகளில் பனிப்பொழிவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாகப் பெரிய நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் சிறிய நீருற்றுகளும் வற்றிப்போகிறது; இதனால், இந்தியாவின் 50 கோடி மக்களின் தாகம் தீர்க்கும் கங்கையின் ஜீவன் கேள்விக்குள்ளாகியுள்ளது. புவி வெப்பமடைவதுதான் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

என்ன, ஏன், எப்படி???

பூமி தோன்றிய போது காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடும், மீத்தேனும் மட்டுமே இருந்தன. ஆக்சிஜன் இருக்கவில்லை. அதனால், உயிரினங்களும் இல்லை. பின்னர் தாவரங்கள் உருவான பிறகு, தாவரங்களும், மரங்களும் கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியிட்டதால் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது. இதுவே உயிரினங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி கார்பனை சேமித்த தாவரங்களும், மரங்களும் பூமிக்கடியில் புதைந்து நிலக்கரி, பெட்ரோலியம் இரும்புகளாக மாறின. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதைந்து போனதால் இவை பழம் எரிபொருட்கள் என அழைக்கப்படுகின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மக்கள் மிக அதிகமான அளவிற்கு பெட்ரோல், டீசல், நிலக்கரியைப் பயன்படுத்தி வருவதால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடும், மீத்தேனும் அதிகமாகச் சேர ஆரம்பித்தன. மேலும், தேவைகளுக்காக காடுகள் படிப்படியாக அழிக்கப்படுவதால் கார்பன்டை ஆக்ஸைடு உள்வாங்ககப்படுவது குறைந்து வருகிறது. இதனால், பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது.

மேலும், பூமி வெப்பமடைவதற்கு பசுங்கூட விளைவு காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, காற்றுமண்டலத்தை பொறுத்தவரை 78 சதம் நைட்ரஜனும், 21 சதம் ஆக்ஸிஜனும் கொண்டதாகும். இவை இரண்டும் சூரியனிலிருந்து வரும் குறுகிய அலை நீள வெப்பத்தையும், பூமியிலிருந்து வெளியேறும் நீண்ட அலை நீள வெப்பத்தையும் காற்று மண்டலம் வழியாகச் செல்ல அனுமதிக்கிறது. ஆக 99 சதவீதம் காற்றுமண்டலம் இருவகை கதிர்களையும் அனுமதிக்கிறது.

மீதமுள்ள 1 சதவீதமான காற்று மண்டலமானது கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஈரப்பதம் ஆகியவற்றால் ஆனது. இந்த ஒரு சதவீத காற்று மண்டலம் தன்னுள்ளே நீண்ட அலை நீளம் உடையவைகளை அனுமதிப்பதில்லை. குறுகிய அலை நீளம் உள்ளவைகளை மட்டுமே அனுமதிக்கிறது. இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ‘பசுங்கூட வாயுக்கள்’ என்றும் இவை ஏற்படுத்தும் விளைவு ‘பசுங்கூட விளைவு’ என்றும் கூறுகிறோம்.
இந்த பசுங்கூட விளைவு மிகவும் முக்கியமானது. இது உயிரினம் தோன்றுவதற்கு மிகவும் ஆதாரமானது. ஆனால், ஒரு சதமானமுள்ள பசுங்கூட வாயுக்களின் அளவு உயரும் போது அதிக அளவிலான வெப்பம், காற்று மண்லத்திலிருந்து மீண்டும் பூமிக்கே திரும்பும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பூமியின் வெப்பம் பூமிக்கே அளவுக்கு

தனிமைப்பட்ட அமெரிக்கா

இந்தோனேசியாவின் பாலிதீவில் உள்ள நூசாதுவாவில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கி 13 நாட்களாக ஐ.நா.சபை சார்பில் உலக காலநிலை மாநாடு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகப் புவியின் வெப்பநிலையை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தொடர்ந்து விடுத்த எச்சரிக்கைகளின் விளைவாகவும், உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டில் காலாவதியாக இருப்பதாலும், புதிய உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான மாநாடு பாலியில் நடைபெற்றது. உலகிலுள்ள 190 நாடுகள் இதில் கலந்து கொண்டன.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தொழிற்சாலைகள், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் வெளியிடும் நச்சுவாயு உள்ளிட்ட மாசுகளின் அளவை குறைப்பதற்கான உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 13 நாட்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் ஐ.நா.சபை முன்வைத்த ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்கா நிராகரித்தது அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்தது.

உலகிலேயே மிக அதிகமான நச்சுவாயுக்களை வெளியிடும் பெரும் நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளன. ஆனாலும் தனது நாட்டின் பெரும் தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தொழில் துறையை சீர்குலைக்கும் நோக்கில், அந்நாடுகளின் தொழிற்சாலைகளுக்குக் கடுமையான விதிகளை வகுக்க வேண்டுமென இம்மாநாட்டில் வாதிட்டது.

ஏற்கனவே கியோட்டோ உடன்பாட்டை செயல்படுத்தாத அமெரிக்கா, புதிதாக உடன்பாடு ஏற்படுவதை கடுமையாக எதிர்த்தது. எனினும் உலகின் 190 நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, புவி வெப்பமடைவதைத் தடுக்க சர்வதேச விதிமுறைகளை வகுப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டை 2009ஆம் ஆண்டில் முழுமையாக உருவாக்குவது என முடிவு செய்துள்ளன. ஆனாலும், இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அமெரிக்கா மட்டும் தனிமைப்பட்டே நின்றது.

மாநாட்டில் பேசிய இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபில், உலக நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், மாநாட்டில் பேசிய பாபுவா நியூகினியா தீவின் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் பங்கேற்ற டோப்ரியான்ஸ்கி எனும் பெண்மணி .”உலக நாடுகளுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால் மாநாட்டை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும்’’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்கிமூன், மனித குலத்தை காப்பாற்றும் பணியில் அமெரிக்காவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் உலகின் 190 நாடுகள் ஒருபுறமும், தனிமைப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் மறுபுறமும் நிற்பதை காண முடிந்தது.

ஏகாதிபத்தியம் இந்த யுத்தத்தில் தனிமைப்பட்டிருப்பது போராளிகளுக்கு வல்லமை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks:Keetru.com

Friday, February 22, 2008

'உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்படுவார்கள்'

உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் பல லட்சம் மக்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள உலக உணவுத்திட்டம், அதேவேளை அந்த மக்களுக்கான உணவு உதவிகளைச் செய்வதற்கு உதவி நிறுவனங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது.

உணவுப் பொருட்களில் குறிப்பாக அரிசிதான் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அரிசியின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளூரில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளன.

அதனால் உலக சந்தையில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அண்மைய காலத்திங்களில், இந்த வருடத்தில்தான், உலகில் நமக்குத் தேவையான அளவை விட குறைவான அளவில் அரிசி உற்பத்தியாகவுள்ளது.

உலகிலேயே அதிகளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்துதான். இந்த அரிசி விலையேற்றத்தால், அங்கு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த சிறப்புப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Thanks:BBCTamil

Wednesday, February 20, 2008

தீவிரவாதிகள் பெயரில் அப்பாவிகளை துன்புறுத்த வேண்டாம்: கார்கே


பெங்களூர், பிப். 20:


தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்த வேண்டாம் என்று போலீஸôருக்கு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பெங்களூரில் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி என்றைக்குமே ஆதரவு தெரிவித்தது இல்லை. எதிர்காலத்திலும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.


ஆனால் தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகளைத் துன்புறுத்தக்கூடாது. இதில் விசாரணை நடத்தும் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பாவிகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுவிடக்கூடாது. தற்போது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சி முன் நிறுத்தப்பட்டு படம் பிடித்து பிரசுரிக்கவும், தொலைக்காட்சியில் வெளியிடவும் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டால் அவர்களது எதிர்கால வாழ்க்கை என்னவாகும். எனவே விசாரணை அதிகாரிகள் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
தற்போது விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கிறது என்றார் அவர்.

நந்திகிராமத்தில் மீண்டும் வன்முறை: 11 பேர் காயம்


நந்திகிராமம், பிப். 20: மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் பூமி பாதுகாப்பு அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் 11 பேர் காயமடைந்தனர்.


தக்கபுரா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் 5 வீடுகளை திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பூமி பாதுகாப்பு அமைப்பினர் திங்கள்கிழமை இரவு சூறையாடினர். இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


போலீஸôரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தக்கபுராவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நந்திகிராமத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கொலை, தீவைப்புச் சம்பவங்கள் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட இவர்களில் 14 பேரை போலீஸ் காவலில் வைக்கவும், 17 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Thanks : Dinamani

Tata-Israel Aerospace Industries ink memorandum of understanding

Front Page
Tata-Israel Aerospace Industries ink memorandum of understanding

Sandeep Dikshit
It is part of announcements made by foreign arms companies to meet their offset obligationsHope pact with IAI will aid defence industry growth: Ratan TataForeign defence firms announce JVs to meet offset obligation

NEW VENTURE:

Chairman of Tata Group Ratan Tata with President and CEO of Israel Aerospace Industries Itshak Nissan after signing an MoU in New Delhi on Sunday.

NEW DELHI:

The Tata Group on Sunday signed a memorandum of understanding with the Israel Aerospace Industries (IAI) for developing and manufacturing a wide range of defence products, including missiles, unmanned aerial vehicles, radars, electronic warfare and security systems.The announcement was made at the ongoing Defexpo here. It is part of several announcements made by foreign arms companies for meeting their offset obligations.

Defence policy

Under the defence purchase policy, between 30 and 50 per cent of all imports over Rs. 300 crore had to be sourced from India. This has made the foreign companies having bagged or in line for big contracts to announce joint ventures or India based companies.“We believe the coming together of the Tatas and the IAI will positively impact the growth of defence industry in India and complement the efforts of our defence labs, ordnance factory board and defence public sector undertakings,” Tata Sons Chairman Ratan Tata said in a statement.The intention is to pass on the offset obligation of the IAI from future defence contracts to the joint venture.The other three defence pacts sealed by the Tata Group companies are with the Boeing, the helicopter company Sikorsky and the European Aeronautic Defence and Space Company (EADS).

Thales’ hope

European military systems integrator Thales said that having earlier bagged an order to fit fire control systems and night vision devices on T-90 tanks, it was hopeful of winning the contract for upgrading the T-72 tanks and armoured personnel carriers.Thales took assistance from a Byelorussian company to fit about 600 T-90 tanks. It was recently asked to work on over 300 more tanks.The France-based company will also set up an Indian company to look after maintenance and servicing issues for thermal imagers. It had been facing problems in executing its offset obligations and expects the initiative to smoothen the path.

DCNS subsidiary

A similar announcement was made by European Naval Defence Systems organisation DCNS. To be called DCNS India, it will be based in Mumbai and become operational in mid-2008.At a press briefing, senior DCNS official Xavier Marchal said the subsidiary would be oriented towards design, service to naval shipyards and sourcing of components and materials in Indian industry.The company would cater to current projects such as Scorpene submarines as well as for future programmes. Actively looking for partners in India for developing major equipments and subsystems, DCNS recently signed agreements with Kirloskar Oil Engines and Walchandnagar Industries.Making a pitch for the lucrative 126 fighter aircraft deal, EADS said its Eurofighter Typhoon would suit India’s tactical and strategic military requirements.Senior official Theodore Benien said the company received orders for over 700 aircraft from Germany, the U.K., Italy, Spain, Austria and Saudi Arabia. Being produced by four countries simultaneously, the fighter is in contention with five other companies for the $10.2-billion contract.Public sector defence company Bharat Earth Movers Limited is showcasing a hi-tech combat vehicle for use in difficult terrains along the border.Termed ‘Command Post vehicle,’ it is a surveillance and reconnaissance system built on a Tatra (Czech) vehicle chassis. It is fitted with advanced electronics imaging, communication and gun mounting with global positioning system.The vehicle is designed to support mechanised infantry battalions by controlling the surveillance grid, collecting inputs from radars and disseminating it to users.

Copyright: 1995 - 2006 The HinduRepublication or redissemination of the contents of this screen are expresslyprohibited without the consent of The Hindu--


Source: The Hindu (http://www.hinduonnet.com/2008/02/18/stories/2008021854801200.htm)


Thanks : Anees

Sunday, February 17, 2008

மனிதாபிமானத்துடன் இவருக்காக ஒரு 10 நிடங்களை ஒதுக்கி உதவுங்கள்



Dear Kind Hearts!




When I visited an Old Age Home in Riyadh, last Saturday, I was told that a man seems to be an Indian is there for last eight years and his identity is unknown. When I saw the man I was shocked. Yes. For last eight years! He should be in his mid forties, now. My imagination went wild for a moment. I could understand by his look that he is an Indian and, that too, he should be from southern part of India. When I enquired the authorities they were very helpful in providing available details about him:




· He was a victim of HIT AND RUN on Dirab Road on (24.03.1421H) today is 9/2/1429H , means in 1999 and lost his consciousness.




· He was admitted to Shumaisi Hospital.




· Since he had no Iqama(Residential permit) or any other things that could prove his identity, he was transferred to prison after treatment.




· Even in prison, neither his sponsor nor any of his colleagues had come to see him.
· So he was transferred to old age home.




· The authorities at the Old Age Home had taken umpteen efforts and forwarded his case to different Embassies, too. But all in vain.




Now he is healthy. He can see, walk, eat but he cannot speak. His memory power is lost. He responds to few verbal commands. His appearance, vaccination mark on his hand and his name (Philisbar Mohen : This was how he was being called when he was in hospital. This is mentioned in Arabic in his case file) all these gave me a strong impression that HE IS AN INDIAN. I have posted his recent photo image and two file photos for your reference.




I am posting this message with lot of hopes and prayers that some one of you might know him or might help him by spreading this message.




Dear kind hearts! Welfare and charity clubs! Any one of you could light his life. Imagine a family without it's head, a mother lost his son and a wife delinked from her mate! Media is a great gift of God. Just a click! That could change his life! That could bring smile on so many faces! Imagine, you were the link for the happiness of the family when their lost son- husband- above all a father is reunited!




Saturday, February 16, 2008

இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் அதிசய சிறுமி




விஜயவாடா: வலது மற்றும் இடது ஆகிய இரு கைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும், திறமைசாலியாக வளர்ந்து வருகிறாள், இந்த ஏழு வயது சிறுமி. அதிலும் இடது கையால் எழுதும் எழுத்தில், ஆச்சரியப்படும் படியாக தலைகீழாகவும், வேகமாகவும் எழுதுகிறாள். விஜயவாடா நகரைச் சேர்ந்த சேக் ரஜியா, இங்குள்ள ஸ்வர்ண பாரதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ரஜியாவுக்கு, எல்.கே.ஜி.,யில் சேர்க்கும்போது இடது கையால் எழுதும் பழக்கம் இருந்தது. இடது கையால் எழுதி வருவதால் அனைத்து பழக்க வழக்கமும் அதேபோன்று வந்துவிடும், என்று நினைத்த ஆசிரியர்கள் கடிந்து கொண்டு வலது கையால் எழுதுவதற்கு பழக்கப்படுத்தினர். ஆனால், சிறுமி ரஜியா, இடது கையால் எழுதும் வழக்கத்தை விட்டபாடில்லை.

ஆனால், இதில் மர்மம் ஒன்று மறைந்துள்ளது. வலது கையினால் அனைவரையும் போல் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதே எழுத்துக்களை கண்ணாடியில் பார்த்தால் எப்படி தெரியுமோ, அதேபோன்று இடது கையினால் வித்தியாசமாக, வேகமாக எழுதும் பழக்கத்தை, சிறுமி ரஜியா இந்த வயதில் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். சாதாரண எழுத்துக்கள் மட்டுமல்ல கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளையும், இடது கையால் தலைகீழாக எழுதி, சாதனை செய்து வருகிறாள் சிறுமி சேக் ரஜியா.

Thanks : Dinamalar



இந்த தகவலை எழுதியவருக்கு எழுத்துப் பிழையோ அல்லது வேறு என்னமோ தெரியவில்லை. ஆச்சரியம் நிறைந்தது என்று எழுதுவதற்குப் பதிலாக இவர்களின் வழக்கப் படி இதில் மர்மம் ஒன்று மறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த சிறுமியின் திறமைகள் இன்னும் வளர அந்த இறைவன் அருள் புரிவானாக.

புண்பட்ட நெஞ்சை புகை போட்டு கொல்லாதே..................










அதிகமா பொகைசென்னா போதஞ்சி போய்டுவே

Friday, February 15, 2008

http://www.abdulkalam.com

http://www.esnips.com/web/Abdul-kalam-Billion-Beats/

அப்துல் கலாம் அவர்களின் பில்லியன் பீட்ஸ் மென்னூல்களின் தொகுப்பு

சாதனை புரிந்த சாதனை நாயக / நாயகிகளின் கட்டுரைகள் இதில் உள்ளன.

http://www.esnips.com/web/Abdul-kalam-Billion-Beats/

இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற வெற்றிக் கதைகளை பிரசுரித்து அவற்றுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கும் வகையில் வாரம் இருமுறை பதிப்பாகும் மின் இதழை (ஈ-பேப்பர்) முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் இதுபோன்ற வெற்றிபெற்ற சம்பவங்களை பிரசுரிப்பதில் பின்தங்கியிருப்பது வருந்தத்த்க்கது என்று தமது முதல் இதழில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

பில்லியன் பீட்ஸ் என்ற பெயரில் அப்துல் கலாமின் சொந்த இணையதளத்தில் எழுதப்படும் வெற்றிக் கதைகள் மூலம் அறிவுசார் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.அப்துல் கலாமுடன் அவரது நண்பர் பொன்ராஜ் இணைந்து இந்த மின் ஊடகப் பதிப்பைத் தொடங்கியுள்ளனர்.ஒவ்வொரு துறையிலும் ஏராளமான வெற்றிக் கதைகள் இருப்பதாகவும், அவற்றை இணைப்பதன் மூலம் அவை மேலும் பிரபலமடைய முடியும் என்றும் கலாம் குறிப்பிட்டுள்ளார்.தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளிப்பதற்காக கலாம் சென்றபோது, அவருக்கு இந்த யோசனை உதயமானது. பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த கலாம் தமது நண்பரிடம், சாதனையாளர்களின் கதைகளை ஏன் நாம் முன்னிலைப்படுத்தக் கூடாது? அதுபோன்ற உதாரண புருஷர்களை ஏன் வெளிச்சத்திற்குக் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்

.அந்த வகையில் உருவானதே பில்லியன் பீட்ஸ் மின் இதழ் என்று கலாம் கூறியுள்ளார்.(ஆங்கிலத்தில்)முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் "பில்லியன் பீட்ஸ்' என்ற மின்னிதழைத் தொடங்கியுள்ளார். தொலைநோக்கு, சரியான பாதையில் இளைய தலைமுறையைத் தூண்டிவிடுதல், கலாமின் லட்சியக் கனவுகள் கொண்ட இந்த இதழில் அரசியல், குற்றச் செய்திகள், எதிர்மறைச் செய்திகளுக்கு இடமில்லை. குழந்தைகளை நேசிக்கும் கலாம் இந்த இதழைக் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த இதழ் மாதம் இரு முறை புதுப்பிக்கப்படுகிறது. ""இந்த இதழில் குழந்தைகள், மாணவர்கள் தங்களது படைப்புகள், யோசனைகள், கருத்துகளை அனுப்பலாம். புதிய சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன'' என்றார் இதன் கருத்து ஆசிரியர் (கன்டென்ட் எடிட்டர்) வி.பொன்ராஜ். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்ட மன்றங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெங்களூரில் இதன் ஆசிரியர் குழுவும் வடிவுமைப்புக் குழுவும் இயங்குகின்றன. தொழில்நுட்பக் குழு மதுரையில் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இணையதளம்:

http://www.abdulkalam.com

Thursday, February 14, 2008

பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிராகக் கருத்திலும் களத்திலும் போராடுவோம் !

இசுலாமிய-கிறித்தவ மக்களை எதிரிகளாகச் சித்திரித்து ஆர்.எஸ்.எஸ்.கும்பல் நடத்தும் மதக்கலவரங்களுக்கு அவதூறுக்ளே மூலப் பொருளாக விளங்குகின்றன. வாழ்க்கை , பண்பாடு, கல்வி, வரலாறு, பொருளாதாரம், அரசியல், பொழுதுபோக்கு, மொழி என அனைதுக் துறைகளிலும் சிறுபான்மை மத மக்களை வெறுக்கும் அண்ணம் இவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முசுலீம்கள் மீதான துவேசம் என்பதைச் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்- இன் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தோடும் காங்கிரசு - போலிக் கம்யூனிஸ்டுகள் - திராவிடக் கட்சிகள் தமிழன ஆர்வலர்கள் ஆகிய சகல பிரிவினடும் வெவ்வேறு அளவில் ஒன்றுபடுகின்றனர். இதுவே இந்து மதவெறியர்களின் பலமாக இருக்கிறது. இத்தகைய அவதூறுகளை பெரும்பான்மை மக்களின் கருத்தாக இயல்பாக மாற்ற முடிகிறது.

புரட்சி கலைஞர்' விஜயகாந்த் இந்து முன்னணியின் பிரச்சாரத்தையே வசனமாகப் பேசுவதும், விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவளரான பழ.நெடுமாறனும் சிவசேனா பால் தாக்கரேயோடு உறவாடுவதும், இப்போது பழ.நெடுமாரனுடன் இணைந்திருக்கும் சுப.வீரபாண்டியன் 'அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதிய கண்ணதாசனையும் 'நம்மாளு' என்று போற்றுவதும், கருணாநிதியும் - ஜெயலலிதாவும் போட்டிக் கொண்டு இந்து முன்னணி இராம.கோபாலனைத் தாஜா செய்வதும் , வேத காலத்தையும் விவேகானந்தரையும் போற்றும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும், கம்பராமயணமே எனக்குப் பிடித்த நூலென்று புல்லரிக்கும் நல்லகண்ணுவும், பா.ஜ.க.வின் அக்கிரகாரத்திற்க்குள் இருந்து கொண்டே சேரி விடுதலை பேசும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் - தலித் பத்திரிகையும், பா.ஜ.க அரசுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும் 'புரட்சி புயக்' வை.கோவும், வாஜ்பாயி மந்திரி பதவி கொடுத்தால் பூணுல் போடவும் தயாராக இருக்கும் பா.ம.க.ராமதாசும்- இப்படிப் பார்ப்பன இந்து மதத்தின் அரசியலையும் பண்பாட்டையும் , நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிப்போர் பலர் இருக்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூடத் தீவிர ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தவர்கள் இப்போது இவ்வாறு மாறியிருப்பதை வெறும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று மட்டும் மதிப்பிடக் கூடாது, தாங்கள் இவ்வாறு இந்துத்துவத்தை அரசியல் ரீதியாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ ஆதரித்தாலும் தங்களது வாங்கு வங்கியும் ஆதரவாளர்களும் தம்மை விடு விலகிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவர்களுகு இருக்கிறது, இந்தத் 'துணிச்சலுக்குக் காரணம் உண்டு. இந்தியப் பண்பாடு , தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் நீக்கமற விரவியிருக்கும் பார்ப்பனீய விழுமியங்களை எதிர்த்த போராட்டத்தினூடாக இவர்கள் தங்களது அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை.

சாதியம் , இனவாதம் உள்ளிட்ட இந்துத்துவக் க்றை படிந்த பண்பாட்டுடனும் கண்ணோட்டங்களுடனும் நிலவிவரும் சமூக அடித்தளத்தின் மீது ஏறி நின்று ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புச் சவடால் அடித்தார்கள். இப்போது அதே அடித்தளத்தின் மீது ஏறி நின்று பா.ஜ.கா விடன் கை குலுக்குகிறார்கள்.இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலின் தலைமைச் சக்திகள் எனப்படுவோர் இப்படி இருப்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. வெள்ளையர் காலந்தொட்டே காந்தி, திலகர், பாரதி போன்றோர் இப்படித்தான் இருந்தனர். இத்தகைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எத்தகைய ஆதரவான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.

அரசியல் துறையே இப்படி இந்துமயமாக மாறியிருக்கும் போது, இலக்கியம், இசை, பத்திரிகைகள் , திரைப்படம், தொலைக்காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே, ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிப் பிரச்சாரம் செய்யும் அவதூறுகள் அவர்களிடமிருந்து மட்டும் தான் கிளப்ப வேண்டும் என்பதில்லை. நீங்கள் எதிர்பாராத ஏதாவது ஒரு திசையிலிருந்தும் அந்த அவதூறுகள் வரும்.தற்போது பள்ளி கல்வித் திட்டத்தில் வரலாற்றைத் திருத்தும் கரசேவையினை இந்து மதவெறியர்கள் பகிரங்கமாக ஆரம்பித்து விட்டனர். இதை எதிர்க்கும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளோ பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கின்றனர்.

இத்தகைய பாராளுமன்ற பஜனைகள் மூலம் அவர்களை வீழ்த்த முடியாது; வீதியில் இறங்கி மக்களை அரசியல் படுத்தி, அணி திரட்டி இந்து மதவெறியர்களுடன் நேரடிச் சம்ர் புரிவதன் மூலமே வேரறுக்க முடியும். இத்தகைய புரட்சிகர அரசியல் நடைமுறையை 90-ஆம் ஆண்டின் முழுவதும் - திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தமிழ் மக்கள் இசை விழா வரை - பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகின்றனதோழர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்றிருக்கிறது. இந்து மதவெறியர்களின் இத்தகைய அவதூறுகளை எங்கெல்லாம் காண்கிறோமோ - திரைப்படம், நாவல் , கவிதை, பத்திரிகை , வானொலி - வானொளி நிகழ்ச்சிகள் - அங்கெல்லாம் அவற்றினை முறியடிக்க வேண்டும்.

துண்டறிக்கை, சுவரெழுத்து, சுவரெட்டி, கடிதம், நேரடி விவாதம் போன்ற வடிவங்களில் மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல வேண்டும். அவதூறுகளை மூலதனமாக வைத்து இந்து முண்னணி - ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட முறைகளில் தலையிட வேண்டும்.இத்தகைய போர்க்குணமிக்க - செயலூக்கம் நிறைந்த முயற்சிகளினூடாகத்தான் இந்து மதவெறியின் பிடியிலிருந்து நாட்டையும் - மக்களையும் விடுவிக்க முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆயுதமாகப் பயன்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்

கருத்து எழுதியவர் நக்ஸல்பாரி-தமிழ்நாடு,

Thanks:satyamagam.com

தொடரும் அல்தாஃபின் அவலம்..............

கடந்த 2008 ஜனவரி 6 ம் தேதியன்று கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள குமளியில் வைத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தத் தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்துக் கேரளாவில் சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீரைச் சேர்ந்த அல்தாஃப், நிரபராதி என காஷ்மீர் அரசே கடிதம் அளித்தப் பின்னரும் இதுவரை விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

தீவிரவாதி எனக் கூறி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அல்தாஃபினை பீருமேடு நீதிமன்றம் 15 நாள் ரிமாண்ட் செய்தது. கிடைத்தச் சந்தர்ப்பத்தை வீணடிக்காமல் அதனைத் தொடர்ந்த நாட்களில் RSS மற்றும் BJP-யினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கேரளா முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டுமல்ல குமளியில் வியாபாரம் செய்யும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கடைகளைத் தகர்த்தும் அவர்களைத் துன்புறுத்தியும் அட்டூழியம் செய்தனர்.

அல்தாஃபினைக் குறித்த செய்தி ஊடகங்களில் பரபரப்பாக்கப்பட்டு பாஜக மற்றும் RSS அமைப்பினர் அதனை வைத்து இலாபம் சம்பாதிக்க இறங்கிய வேளையில் அவர்களுக்குப் போட்டியாகக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பால கிருஷ்ணன், "அல்தாஃப் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் உள்ள தீவிரவாதி" எனவும் "காஷ்மீரில் காவல்துறையால் தேடப்படும் பல தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி" எனவும் "மத்திய உளவுதுறையின் கண்களில் மண்ணைத் தூவி கேரளாவில் மறைந்து வாழ்வதாகவும்" "இன்று முதல் கேரளா முழுவதும் உள்ள அன்னிய மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள்" எனவும் அறிவித்து அதன்படி கேரளாவில் வாழும் காஷ்மீர் முஸ்லிம்களின் மீது காவல்துறையின் கண்காணிப்பு என்ற பெயரில் தன் பங்கிற்குக் காவல்துறையை வைத்து அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டார்.

இதனிடையே அல்தாஃப் அடைக்கப்பட்டிருந்தச் சிறைசாலைக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் அங்கு அல்தாஃபின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் தாக்குதல் நடைபெறலாம் எனக் கூறி அல்தாஃபை விய்யூர் மத்தியச் சிறைசாலைக்கு மாற்ற நீதிமன்றத்திலிருந்துக் காவல்துறை உத்தரவு பெற்றுக் கொண்டு அல்தாஃபை விய்யூர் மத்தியச் சிறைசாலைக்கு மாற்றியது.

இவ்வேளையில் அல்தாஃபின் சகோதரர், "தனது தம்பி அல்தாஃப் நிரபராதி எனவும் அரசுக்கு எதிராகவோ நாட்டுக்கு எதிராகவோ சட்டத்திற்குப் புறம்பான விதத்திலோ எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை எனவும் அப்பாவியான அவன் மீது காவல்துறை வேண்டுமென்றே பொய் வழக்குத் தொடுத்துள்ளது" எனவும் கூறி சமர்ப்பித்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அல்தாஃபின் ரிமாண்டை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்தது. அதனைத் தொடர்ந்து அல்தாஃபின் தந்தை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு சமர்ப்பித்தார். அங்கும் தீவிரவாதியை வெளியே விட முடியாது எனக்கூறி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், "காஷ்மீர் காவல்துறைக்கு ஏதாவது வழக்குத் தொடர்பாக அல்தாஃபை அவசியமா?" என கேட்டுப் பதிலளிக்குமாறு அரசுக்கு கேரள உயர்நீதி மன்றம் உத்தரவும் போட்டது.

இதனிடையே காஷ்மீர் முதல்வர் அலுவலகத்தை அணுகிய அல்தாஃபின் தந்தைக்கு, "அல்தாஃபை காஷ்மீரில் எந்த ஒரு வழக்குத் தொடர்பாகவும் தங்களுக்குத் தேவையில்லை எனவும் காஷ்மீரில் அல்தாஃப் சட்டத்திற்குப் புறம்பாக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும் இத்தகவல் கேரளக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது" எனவும் காஷ்மீர் முதலமைச்சரின் ஆலோசகரான மன்சூர் அஹ்மத் கனாய் காஷ்மீர் IG-க்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பபட்டுள்ளதாகத் தெரியப்படுத்துகிறார்.

இக்கடிதத்தின் நகல் DIG-க்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடனேயே காஷ்மீர் முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இக்கடிதத்தின் நகலைப் பெற்றுக் கொண்ட அல்தாஃபின் தந்தை, அதனை கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து, "நிரபராதியான தனது மகனுக்கு ஜாமீன் மட்டுமாவது உடனடியாக அனுமதிக்க வேண்டும்" எனக் கோரினார். ஆனால் இந்த மனுவையும் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனுவின் மீதான விசாரணையின் பொழுது இவ்வாறான ஒரு கடிதம் குறித்துக் கேரளக் காவல்துறைக்கு எதுவுமே தெரியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனைத் தொடர்ந்து "தற்பொழுதைக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று அதனை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக" அறிவித்து அல்தாஃபின் ரிமாண்டை உயர் நீதிமன்றம் மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு அப்பாவி முஸ்லிம் மீது ஏதோ காரணத்திற்காகப் புனையப்பட்டத் தீவிரவாதி நாடகத்தின் உண்மைகள் வெளிவந்து விட்டச் சூழலில் அல்தாஃபின் கைதை வைத்து அரசியல் இலாபம் தேடும் நோக்கில் முன்பு அல்தாஃபை "ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி" என அறிவித்திருந்தக் கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தற்பொழுது, "அல்தாஃபை ஊடகங்களே தீவிரவாதியாக்கின" எனக் கரணம் அடித்துள்ளார்.

இந்தியாவில் எந்த ஒர் இடத்திலும் எவ்விதச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எவ்விதத் தகவலும் இல்லாத அல்தாஃப் கடந்த ஒரு மாதக் காலமாக முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவரும் அவருடையக் குடும்பமும் அவரைப் போன்ற எண்ணற்ற காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களும் கேரளக் காவல்துறையாலும் நீதித்துறையாலும் அங்கும் இங்கும் அலைகழிக்கப்படுகின்றனர்.
 Thanks:Satyamargam.com